3 எம்எல்ஏக்கள் விவகாரம் : இடைக்கால தடையை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்- அமைச்சர் ஜெயக்குமார்

3 எம்.எல்.ஏ-க்களுக்கு சபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் தனபால்  அனுப்பிய நோட்டீஸுக்கு எதிராக எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்நிலையில் இதை விசாரித்த உச்சநீதிமன்றம் 3 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் அளித்த நோட்டீஸுக்கு இடைக்காலத் தடைவிதித்து உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில்,3 எம்.எல்.ஏ-க்களுக்கு சபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Leave a Comment