அதிசயம்! எரிமலைக்குள் விழுந்து உயிர் பிழைத்த மனிதர்!

அமெரிக்காவில் உள்ள ஹவாய் மாகாணத்தில் இருக்கும் பயங்கரமான எரிமலைகளில் ஒன்று, சிலுவா எரிமலை. இந்த எரிமலையை காண சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் அங்கு குவிந்து வருவது வழக்கம்.

அப்படி அந்த எரிமலையை சுற்றி பார்க்க வந்த 32 வயதுடைய நபர், அந்த எரிமலையை அருகில் சென்று பார்த்துள்ளார். அப்போது கால் இடறி உள்ளே விழுந்துவிட்டார், உடனே தகவல் அவசர உதவிக்கு தெரியப்படுத்த அவர்கள் உடனடியாக களத்தில் இறங்கினர்.

உடனே செங்குத்தான எரிமலையில் தவறி விழுந்தவரை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்ந்தனர், படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த அவர் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையை தாண்டி விட்டார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment