திருப்பூரில் இன்று மட்டும் 28 பேருக்கு கொரோனா..பாதிப்பு 108 ஆக உயர்வு.!

தமிழகத்தில் இன்றும் மேலும் 49 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், அதில் 28 பேர் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.

தமிழகத்தில் இன்று 49 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் மொத்தம் எண்ணிக்கை 1,372 ஆக உயர்ந்துள்ளது. அந்த 49 பேரில் இன்று மட்டும் திருப்பூரில் 28 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அங்கு ஏற்கனவே 80 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 108 ஆக அதிகரித்துள்ளது. திருப்பூரில் தற்போது பாதிக்கப்பட்டுள்ள நபர்கள், ஏற்கனவே கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என சுகாதாரத்துறை விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சென்னையில் 7 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியான நிலையில், தற்போது 235 ஆக உயந்துள்ளது. தமிழகத்தில் சென்னை தான் கொரோனாவால் அதிகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கோயம்பத்தூரில் ஒருவருக்கு கொரோனா உறுதியான நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 128 ஆக உள்ளது என குறிப்பிடப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்