21ஆம் ஆண்டின் பெரிய ஜோக் : அமைச்சர் ஜெயகுமார் விமர்சனம்

அதிமுகவின் இரட்டை இலை சின்னம் இபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கு கிடைத்தது T.T.V.தினகரன் அணிக்கு பெரும் அடியாக விழுந்துள்ளது. இந்நிலையில் தினகரன் அணியில் இருந்த 3 எம்பிகள் இபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கு தாவினர்.

இந்நலையில் அவர்கள் தன்னிடம் கேட்டுத்தான் முதல்வர் அணியில் சேர்ந்திருப்பதாக தினகரன் பேட்டியில் கூறியிருந்தார். இதற்க்கு பதிலளிக்கும் விதமாக பேசிய அமைச்சர் ஜெயகுமார், தினகரன் கூறியிருப்பது 21ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய ஜோக் எனவும், மேலும் தினகரன் கூடாரம் காலியாகி வருவதாகவும், தான் மதுசூதனனை வேட்பாளராக அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக வந்த தகவல் உண்மையில்லை எனவும் பத்திரிக்கையாளர் சந்திப்பில்  கூறினார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment