2018 காமன்வெல்த் போட்டி:பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு பரிசுத் தொகை அறிவித்த முதலமைச்சர்!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு,  பரிசுத் தொகை அறிவித்துள்ளார்.

அதன்படி,  டேபிள் டென்னிஸ் ஆடவர் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவுகளில் முறையே வெள்ளி, வெண்கலம் வென்ற சத்தியனுக்கு ரூ. 50 லட்சம் ஊக்கத் தொகையை முதல்வர் அறிவித்துள்ளார்.

டேபிள் டென்னிஸ் ஆடவர் இரட்டையர், தனிநபர் பிரிவுகளில் முறையே வெள்ளி, வெண்கலம் வென்ற சரத் கமலுக்கு ரூ. 50 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்குவாஷ் மகளிர் இரட்டையர் பிரிவு, கலப்பு இரட்டையர் பிரிவுகளில் வெள்ளி பதக்கங்கள் வென்ற தீபிகா கார்த்திக்கிற்கு ரூ. 60 லட்சம் ஊக்கத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்குவாஷ் ஆடவர் கலப்பு இரட்டையர் பிரிவில் வெள்ளி வென்ற சவுரவ் கோஷலுக்கு ரூ.30 லட்சம் பரிசுத் தொகையை முதல்வர் அறிவித்துள்ளார்.

ஸ்குவாஷ் மகளிர் இரட்டையர் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்ற ஜோஸ்னா சின்னப்பாவுக்கு ரூ.30 லட்சம்  ஊக்கத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment