மஹாராஷ்டிராவில் 200 செவிலியர்கள் திடீர் ராஜினாமா!

மஹாராஷ்டிராவில் 200 செவிலியர்கள் திடீர் ராஜினாமா.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் கொரோன அவைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து தான் வருகிறது. 

இந்தியாவில் இதுவரை கொரோனா வைரஸால், 151,876 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் பல்வேறு மருத்துவமனைகளில் பணிபுரிந்து வரும் 200-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், இவர்கள் ரயில் மற்றும் விமானங்கள் இயங்குவதால், தங்களது சொந்த ஊருக்கே சென்று பணியாற்ற விரும்புவதாக தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், ஏற்கனவே, மேங்கு வங்கத்தில் 600-க்கு மேற்பட்ட செவிலியர்கள் ராஜினாமா செய்து, தங்களது சொந்த மாநிலங்களுக்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.