2.O படத்தின் டிக்கெட்டை அதிக விலைக்கு விற்கக்கூடாது! ரசிகர்களுக்கு சூப்பர் ஸ்டார் கடிதம்!!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அக்ஷ்ய்குமார் நடித்துள்ள திரைப்படம் 2.O. இப்படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். இப்படம் நவம்பர் 29ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

பெரிய நடிகர்களின் படம் என்றாலே அதிகாலை ரசிகர் காட்சி வைத்து டிக்கெட் விலை விண்ணைமுட்டும் அளவிற்கு விற்கப்படும். இதனை தடுக்க பல நடவடிக்கைகள் எடுத்தும் ரசிகர்களுக்கு இருக்கும் முதல் காட்சி பார்க்கும் ஆவலை சிலர் பயன்படுத்திக்கொண்டு அதிக விலைக்கு டிக்கெட்டுகளை விற்றுவிடுகின்றனர்.

இதனை தடுக்க தற்போது ரஜினிகாந்த் ஓர் முயற்சியை எடுத்துள்ளார். அவர் நடிப்பில் நவம்பர் 29ஆம் தேதி 2.O படம் வெளியாக உள்ளது. அதில் ரசிகர் மன்ற டிக்கெட்டுகளை யாரும் அதிக விலைக்கு வெளியில் விற்கக்கூடாது என்றும், ரசிகர்களுக்கு எந்த திரையரங்கும் டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்கக்கூடாது என்றும் ரஜினி தன் மன்றத்தின் வாயிலாக கடிதம் மூலம் அனைவருக்கும்  தெரிவித்துள்ளார்.

source : cinebar.in

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment