வ.உ.சிதம்பரனரின் 150ஆவது நினைவு நாள் : வ.உ.சி பன்னூல் திரட்டு, திருக்குறள் உரை வெளியீடு!

வ.உ.சிதம்பரனரின் 150 ஆவது நினைவு நாளை முன்னிட்டு, வ.உ.சி பன்னூல் திரட்டு, திருக்குறள் உரை ஆகிய நூல்களை முதல்வர் வெளியிட்டுள்ளார். 

இன்று கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரனாரின் 85-து நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. எனவே இன்று காலை சென்னை ராஜாஜி சாலையில் அமைந்துள்ள வ உ சிதம்பரனார் முழு உருவச் சிலைக்கு தமிழக அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

அதன் பின்னதாக சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற விழாவில் விடுதலைப் போராட்ட வீரர் வ உ சி அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் முன்னெடுப்பாக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் வெளியிடப்பட்டுள்ள வஉசி பன்னூல் திரட்டு முதல் தொகுதி மற்றும் வஉசி திருக்குறள் உரை இரண்டாம் தொகுதி ஆகிய நூல்களை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ளார்.

author avatar
Rebekal