+2 அரையாண்டு தேர்வு வினாத்தாள் வெளியாகவில்லை..!அமைச்சர் செங்கோட்டையன் ..!

12-ம் வகுப்பு அரையாண்டு தேர்வில் வேதியியல் வினாத்தாள் முன்கூட்டியே வெளியாகவில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
12-ம் வகுப்பு அரையாண்டு தேர்வில் வேதியியல் வினாத்தாள் முன்கூட்டியே சமூக வலைதளங்களில் வெளியாகியது.இந்நிலையில் தேர்வில் அதே வெளியான வினாத்தாள் போலவே இருந்தது.
மேலும் 12 ம் வகுப்பு வேதியியல் தேர்வும் நடைபெற்று முடிந்துவிட்டது.கடும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக வாய்மூடி இருக்கிறது பள்ளிக் கல்வித்துறை  என்று மக்கள் வசைப்பாடி நிலையில் தற்போது 12-ம் வகுப்பு அரையாண்டு தேர்வில் வேதியியல் வினாத்தாள் முன்கூட்டியே வெளியாகவில்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.மேலும் வினாத்தாள்களை வெளியான விவாகரத்தில் 2 மாணவர்கள் பூட்டை உடைத்து வினாத்தாளை திருட முற்பட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார்.

author avatar
kavitha

Leave a Comment