ஸ்விங்கில் மிரட்டிய அன்டர்சன்…! இந்திய அணி 107 ரன்னுக்கு சுருண்டது…!

முதலாவது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி தொடங்கியது.இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

நேற்று இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவிருந்த முதல் நாள் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டமும் மழையால் தாமதமாக தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ரூட் இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தார்.

இதை தொடர்ந்து தனது பேட்டிங்கை தொடங்கிய இந்திய 35.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 107 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்திய அணியில் அதிகபட்சமாக அஷ்வின் 29,விராட் 23 ரன்கள் அடித்தனர்.மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர்.இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் அன்டர்சன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
மேலும் செய்திகளுக்கு DINASUVADU-டன் இணைந்திருங்கள்.

Leave a Comment