இரண்டு குழந்தைகளை அரிவாளால் கொடூரமாக வெட்டிக்கொன்ற தந்தை, தானும் கழுத்தறுத்து விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள சல்வார்பட்டியை சேர்ந்தவர்கள் அந்தோணி – முனீஸ்வரி தம்பதி. கூலித் தொழிலாளியான இவர்களுக்குள் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், இன்று காலை அந்தோணி வீட்டில் அவரது, மகன், மகள் மற்றும் மனைவி ரத்தவெள்ளத்தில் கிடந்தது அக்கம்பக்கத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இரண்டு குழந்தைகளும் பிணமாகவே மீட்கப்பட்டனர். உயிருருக்கு போராடிக் கொண்டிருந்த மனைவி முனீஸ்வரி சாத்தூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அந்தோணி தமது குழந்தைகள், மனைவியை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடியது தெரியவந்தது. இதையடுத்து அந்தோணி தேடப்பட்டு வந்த நிலையில், அவர் கண்மாய் அருகே கழுத்தறுத்து தற்கொலை செய்து கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது. ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை காவல்துறையினர் மீட்பதற்குள் பரிதாபமாக உயிரிழந்தார். குடும்பத் தகராறு காரணமாகவே அந்தோணி இப்படி ஒரு ஈவு இரக்கமற்ற செயலில் ஈடுபட்டதாக கூறப்படும் நிலையில், போலீசாரின் விசாரணையில் தான் உண்மைக் காரணம் தெரியவரும்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
Noodles recipe-ஹோட்டல்களில் கிடைப்பது போல் அதே சுவையில் நூடுல்ஸ் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தேவையான பொருள்கள்: நூடுல்ஸ் =150 கிராம் எண்ணெய் =5…
சென்னை : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணியும், பஞ்சாப் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 69-வது போட்டியாக இன்று…
IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…
சென்னை: ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் ஓர் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர். இந்த ஆண்டு ஜூன்…
சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில…