ராகுல்காந்தி 621 முறை, காங்கிரஸ் 427 முறை : மோடி பிரச்சராத்தில் பேசிய கணக்கு

குஜராத்தில் தேர்தல் களம் படு பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கிறது. இதில் குஜராத் பகுதியில் முதல் கட்ட வாக்குபதிவு நடந்து வருகிறது. இந்நிலையில் ஆட்சியை தக்க வைக்க பாஜகவும், ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ்சும் கடும் போட்டி போட்டு வருகின்றனர்.

காங்கிரசுக்கு ஆதரவாக பட்டேல் சமூகத்தினர், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களின் ஆதரவும் வெகுவாக பெருகி வருகிறது. இந்நிலையில் குஜராத் தேர்தல் பிரசாரத்தில், பிரதமர் நரேந்திர மோடி அதிகமுறை ராகுல் பெயரை உச்சரித்து விமர்சனம் செய்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் மணிஷ்திவாரி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், ‘குஜராத்தில் தேர்தல் பிரசாரம் செய்தபோது மோடி, “குஜராத் மாடலை” பற்றி ஒருமுறை கூட பேசவில்லை என்றும், ஆனால், அகில இந்தியா காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பெயரை 621 முறை உச்சரித்திருக்கிறார் என்று பதிவிட்டுள்ளார். மேலும் இது ஒரு பத்திரிகையாளரின் கணக்கீடு என அவர் பதிவிட்டுள்ளார்.

குஜராத்தில் தேர்தலுக்காக இதுவரை 29 பிரசார கூட்டங்களில் பிரதமர்  மோடி பங்கேற்றுள்ளார். என்றும், அப்போது, ராகுல் காந்தி பெயரை நேரடியாகவோ, மறைமுகமாக 621 முறை மோடி கூறிஉள்ளதாக அவர் பதிவிட்டுள்ளார்.

மேலும், காங்கிரஸ் பெயரை 427 முறையும், சர்தார் வல்லபபாய் படேல் பெயரை 209 முறையும், விகாஸ் என்பதை 103 முறையும், இந்து என்பதை 93 முறையும், ராம் என்பதை 27 முறையும் கூறி உள்ளதாகவும்  அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment