முதல் முறையாக நீர்வழி விமானத்தில் பயணம் செய்யும் மோடி

குஜராத் மாநிலத்தில் தேர்தல் முதல் கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதனை தொடர்ந்து அடுத்த கட்ட தேர்தல் வருகிற 14ஆம் தேதி நடைபெறுகிறது.

இதை தொடர்ந்து கட்சி தலைவர்கள் இன்று இறுதி கட்ட தேர்தல் பிரசாரத்தில் பரபரப்பாக இயங்கி வருகின்றனர். குஜராத்தில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் ரோட்டில் பிரசாரம் செய்ய தடை செய்யப்பட்டுள்ளது.

குஜராத் மாநில பிரசாரத்திற்காக அகமதாபாத்தில் முதன்முறையாக நீர்வழி விமானத்தில் பிரதமர் நரேந்திர மோடி பயணம் செய்கிறார். சபர்மதி ஆற்றில் இருந்து தரோய் அணைக்கு நீர்வழி விமானத்தில் பிரதமர் மோடி பயணம் செய்கிறார். பிறகு, தரோய் அணை அருகே உள்ள அம்பாஜி கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தார் பிரதமர் மோடி

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment