#Breaking:”தேர்தல் பிஸியில் இருக்கும் பிரதமர் மோடிக்கு மக்களின் உயிரைப் பற்றி அக்கறை இல்லை”- காங்கிரஸ் தலைவர் கடும் விமர்சனம்..!

மேற்கு வங்க தேர்தல் பணிகளில் பிசியாக இருக்கும் பிரதமர் மோடிக்கு,கொரோனாவால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நாட்டு மக்களின் உயிரைப் பற்றி அக்கறை இல்லை என்று காங்கிரஸ் தலைவர் நானா படோலே கடுமையாக விமர்சித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா 2 வது அலையின் தாக்கம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.கொரோனா வைரஸினால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்,மேலும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிறது.இதற்கு இடையில் கேரளா,தமிழ்நாடு,புதுச்சேரி,அசாம் மாநிலங்களில் சட்ட சபை தேர்தல் முடிவடைந்துள்ளன,மேலும் வாக்குப்பதிவானது மே 2 ஆம் தேதியன்று எண்ணப்படும்.

ஆனால்,மேற்கு வங்கத்தில்,294 தொகுதிகளில் 8 கட்டங்களாக மாநில சட்ட சபை தேர்தலானது நடைபெறுகிறது.இதில் முதல் 4 கட்ட தேர்தல் முடிவடைந்து பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.மேலும் தேர்தலில் 5 ஆம் கட்ட தேர்தலானது ஏப்ரல் 17 இல் நடைபெற உள்ள நிலையில்,வாக்குப்பதிவிற்கான பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது.

இந்நிலையில் மேற்கு வங்க தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் பிரதமர் மோடி குறித்து,மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படோலே கூறியாதவது:”கொரோனா வைரஸ் தொற்றானது நாடு முழுவதும் அதிகமாக பரவி வருவது குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கைகள் அதிர்ச்சியளிக்கின்றன.ஆனால்,பிரதமர் மோடியோ தற்போது மேற்கு வங்க தேர்தல் பிரச்சாரத்தில் பிஸியாக இருக்கிறார்.அவருக்கு கொரோனா தொற்றினால் பாதிக்கப்படும் மக்களின் உயிர்களைப் பற்றி கவலை இல்லை.மேற்கு வங்க தேர்தலை முடித்த பிறகுதான் பிரதமர் மோடி நாடு தழுவிய முழு ஊரடங்கை அறிவிப்பார்”,எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.