தூத்துக்குடி மாவட்டம் எப்போதும்வென்றானில் உள்ள தனியார் நிறுவனத்தின் அலட்சியத்தால் பறிபோன உயிர்கள்…!

தூத்துக்குடி மாவட்டம் எப்போதும்வென்றானில் கடந்த சில வருடங்களாக இயங்கி வருகின்ற IBPL என்ற தனியார் நிறுவனமானது சரியான பாதுகாப்பில்லாத இயந்திரங்களையும், கட்டுமான அமைப்பையும் கொண்டு இயங்கி வருகின்றது.இந்நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த வே.சுடலைபாண்டி என்ற 25 வயது MBA பட்டதாரி இளைஞர் ஒருவர் இரவு வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது ஏற்பட்ட விபத்து காரணமாக பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.இது போல் பல விபத்துக்கள் ஏற்பட்ட பின்னரும் இந்நிறுவனத்தின் அலட்சியப்போக்கினால் ஒரு உயிரிழப்பு நேர்ந்து விட்டது.தனியார் முதலாளிகளிடம் லஞ்சம் பெற்று தின்று கொளுத்த அதிகாரிகள் இதனை கண்டுகொள்ளாமல் விட்டது தான் சோலைமுத்து என்ற மற்றொரு வாலிபர் உயிரிழப்புக்கு முக்கிய காரணம் எனவும்,உயிரிழப்பு சம்பவம் ஊர் மக்களுக்கு தெரிந்ததும் நிறுவனம் பாதுகாப்பு கட்டமைப்புடன் இருப்பது போல் கண் துடைப்பு நாடகம் போடுகின்றனர். தமிழக அரசே முன்வந்து  இது போன்ற சரியான பாதுகாப்பில்லாத நிறுவனங்கள் இயங்கும் உரிமத்தை ரத்து செய்யவேண்டும் எனவும் எப்போதும்வென்றான் கிராமப்பொதுமக்கள் வன்மையாக கண்டித்து கோரிக்கை வைத்துள்ளனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment