தி.மு.கவின் துரைமுருகன், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை மனதில் வைத்து எழுப்பிய கேள்வியால் சட்டப்பேரவையில் சிரிப்பலை எழுந்தது.
கடந்த முறை வெளியிடப்பட்ட காவல்துறை மானியக் கோரிக்கை அறிவிப்புகளில் எத்தனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியபோது குறுக்கிட்ட எதிர்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன், ஜெயலலிதா அறிவித்ததைப் பற்றியும், நீங்கள் அறிவித்ததை பற்றியும் கூறினீர்கள், இடையில் ஒருவர் முதலமைச்சராக இருந்தார், அவர் அறிவித்ததை ஏன் விட்டுவிட்டீர்கள், அவர் பாவம் இல்லையா என கேட்டார்? அப்போது அவையில் சிரிப்பலை எழுந்தது.
இதற்கு பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இவ்வளவு அக்கறையாக துரைமுருகன் கேட்டதற்கு நன்றி என்று கூறியதோடு, அவரது நோக்கம் புரிகிறது என்றும் குறிப்பிட்டார்.
தங்களின் ஒற்றுமையை பார்த்து துரைமுருகனுக்கு கண் உறுத்துவதாகவும், எவ்வளவு முயற்சி செய்தாலும் தங்களின் ஒற்றுமையை பிரிக்கமுடியாது எனவும் பதிலளித்தார். அப்போது அதிமுக உறுப்பினர்கள் மேசையை தட்டி வரவேற்பு தெரிவித்தனர்.
CSK old Fan : 103 பழையமையான சிஎஸ்கே ரசிகருக்கு, சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனி அவருக்கு ஒரு அன்பு பரிசை கொடுக்கும் வீடியோவானது பார்ப்போர்…
Kamal Haasan : உத்தமவில்லன் பட விவகாரத்தில் கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் புகார் அளித்துள்ளது. ரமேஷ் அரவிந்த் என்பவர் இயக்கத்தில் நடிகர்…
Weather Update: தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது. அக்னி நட்சத்திர வெயில் என்று சொல்லப்படும் "கத்திரி வெயில்' நாளை முதல்…
Covaxin : எங்கள் தடுப்பூசியில் பக்க விளைவுகள் இல்லை என கோவாக்சின் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. 2019ஆம் ஆண்டு முதல் சுமார் 2 வருடங்கள்…
Gold Price: தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.800 குறைந்ததால் மக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர். சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக…
Weather Update : தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கோடை வெயில் மக்களை வாட்டி…