திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் மத்திய நிதி ஆணைய ஆய்வு வரம்புகளை திருத்துமாறு பிரதமர் நரேந்திர மோடி , மத்திய நிதி அமைச்சர் மற்றும் தமிழகம் உள்ளிட்ட 10 மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், கூட்டுறவு கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுவதாகக் கூறும் மத்திய அரசு 5 ஆண்டுகள் மாநிலங்களின் சிறப்பான நிர்வாகத்துக்குத் தேவையான நிதி பகிர்வை பரிந்துரை செய்யும் மத்திய நிதி ஆணையத்திற்கு, ஆய்வு வரம்பை நிர்ணயிக்கும்போது ஜிஎஸ்டி கவுன்சில் மற்றும் மாநிலங்களின் ஆலோசனையை கேட்கவில்லை என்று ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இது கூட்டாட்சி தத்துவத்தை மீறுவது மட்டுமின்றி, சிறப்பாக செயல்படும் மாநிலத்தின் நிதி, சரியாக செயல்படாத மாநிலத்துக்கு கிடைக்கும் நிலையை ஏற்படுத்தி விட்டதாகவும் அவர் குறை கூறியுள்ளார்.
எனவே, மாநில நிதி தன்னாட்சிக்கு எதிராக பாரபட்சமாக வகுக்கப்பட்டுள்ள மத்திய நிதி ஆணையத்தின் ஆய்வு வரம்புகளை மாநிலங்களுடனும், ஜிஎஸ்டி கவுன்சிலுடனும் கலந்தாலோசித்து திருத்தியமைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி, மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி மற்றும் தமிழக முதலமைச்சர் உள்பட 10 மாநில முதலமைச்சர்களுக்கும் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…