சென்னையில் பிரபல நடிகர் மீது பண மோசடி வழக்கு பதிவு…!!

பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷன் மீது மோசடி வழக்கு!

சென்னை: நடிகர் ஹிரித்திக் ரோஷன் மற்றும் 8 பேர் மீது சென்னை  போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர்.
முரளிதரன் என்பவர் குர்கானை சேர்ந்த நிறுவனத்தின் ஸ்டாக்கிஸ்ட்டாக வேலைக்கு சேர்ந்துள்ளார். இதன் விளம்பரத்தில் ஹிர்த்திக் ரோஷன் தொடந்து  நடித்துவந்தார்.
இதற்கிடையில் நிறுவனம் பொருட்களை சரியான நேரத்தில் வழங்கவில்லை என முரளிதரன் குற்றம் சாட்டியுள்ளார். இதனால் தேக்கமடைந்த பொருட்களை நிறுவனத்துக்கு அளித்தபோது அவர்கள் பணத்தை திரும்பித் தர தயாராக இல்லை.
இதனால் குடோன் வாடகைக்கான பணம், ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய பணம் என மொத்தம் ரூ. 21 லட்சம் என முரளிதரன் குற்றம் சாட்டியிருந்தார். இதுகுறித்து ஹிர்த்திக் ரோஷன், 8 பேர் மீது சென்னை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
DINASUVADU 
author avatar
Dinasuvadu desk

Leave a Comment