சபரிமலை விவகாரம்: எதிர்கட்சிகள் அமளியால் கேரள சட்டப்பேரவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு…!!

சபரிமலை விவகாரத்தில் அரசின் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்து எதிர்கட்சி உறுப்பினர்கள் சபாநாயகரை முற்றுகையிட்டதால், கேரள சட்டப்பேரவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் விவகாரத்தில் பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்புகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. போராட்டக்காரர்கள் மீது கேரள அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும், சபரிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 144 தடை உத்தர அமலில் உள்ளது.
சபரிமலை விவகாரத்தில் கேரள அரசின் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்து சட்டப்பேரவையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இன்று காலை பேரவை கூடியதும், சபாநாயகரின் இருக்கையை முற்றுகையிட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
dinasuvadu.com

author avatar
Dinasuvadu desk

Leave a Comment