சபரிமலையில் தரிசனம் செய்ய திருநங்கைகளுக்கு அனுமதி…!!

சபரிமலையில் தடுத்து நிறுத்தப்பட்ட 4 திருநங்கைகளுக்கு, தரிசனம் செய்ய இன்று அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், போலீஸ் பாதுகாப்புடன் சன்னிதானத்திற்கு புறப்பட்டனர்.
கோட்டயம் மற்றும் எர்ணாகுளத்தை சேர்ந்த திருநங்கைகள் அனன்யா, திருப்தி, அவந்திகா, ரஞ்சுமோல் ஆகிய நான்கு பேர் சபரிமலைக்கு இருமுடிகட்டி ஐயப்பனை தரிசிக்க சென்றனர். எரிமேலி வழியாக பம்பைக்கு செல்ல முயன்ற அவர்களை தடுத்து நிறுத்தி போலீஸார் திருப்பி அனுப்பினர்.
முறைப்படி விரதம் இருந்து, இருமுடி கட்டி சபரிமலை கோவிலுக்கு வந்துள்ளதாகவும், நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாகவும் போலீஸாரிடம் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் அவர்களுக்கு தரிசனம் செய்ய இன்றுஅனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் நான்கு பேரும் போலீஸ் பாதுகாப்புடன் சன்னிதானத்துக்கு புறப்பட்டனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment