கோப்பையை கைப்பற்றிய இந்தியா

முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான இறுதி  போட்டியில் இந்திய அணி  5 விக்கெட்  வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் அணிகள் இடையேயான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்தது. இன்று நடைப்பெற்ற இறுதி  போட்டியில் இந்தியா – பங்களாதேஷ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி வங்கதேச அணியை பேட்டிங் செய்ய பணித்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய தமிம் மற்றும் லிட்டான்  ஜோடி அடுத்து அடுத்து ஆட்டம் இழந்தனர்.அதன் பின்னர் களமிறங்கிய சபீர் ரஹ்மான் நிதானமாக விளையாடி 77(50) ரன்கள்  எடுத்து ஆட்டமிழந்தார் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர் அந்த அணி  20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு  166 ரன்கள் எடுத்தது .சஹல் அதிக பட்சமாக 3 விக்கெட் எடுத்தார்.

பின்னர்  இந்திய அணியின்  தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் – தவான் களமிறங்கினர் இருவரும் அதிரடி காட்டுவார்கள் என எதிர்பார்த்த நிலையில் தவான் 10 ரன்களில் ஆட்டம் இழந்தார் .அதன் பின் களமிறங்கிய ரெய்னா அதிரடி காட்டுவார் என எதிர்பார்த்த நிலையில் ரன் எதுவும் எடுக்காமல் ருபெல் பந்தில் டக் அவுட் ஆனார்.

ரோஹித் சர்மா அரைசதம்:

அவரைத்தொடர்ந்து லோகேஷ் ராகுல் ருபெல் பந்தில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரோஹித் சர்மா 42 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து நஷ்முல் இஸ்லாம் பந்தில் ஆட்டமிழந்தார்.மேலும் இது ரோஹித் சர்மாவின் 14வது டி20 அரைசதமாகும்.மனீஷ் பண்டே 28 ரன் எடுத்து ஆட்டமிழந்தார் . விஜய் சங்கர் 17(19) ஆட்ட மிளக்க மற்றும் தினேஷ் கார்த்திக் 29(8) மற்றும் வாஷிங்டன் சுந்தர்  ஆட்டம் கடைசி ஒரு பந்து மிஞ்சிய நிலையில் 6 அடித்து இழக்காமல் இருந்து வெற்றிக்கு வித்திட்டனர் .

 

 

 

 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment