கொதித்தெழுந்த விக்னேஷ் சிவன்-காரணம் இதுதான்

புது படம் குறித்து ட்விட்டரில் தனது விமர்சனத்தை பதிவு செய்யும் நபர் ஒருவர் அண்மையில், “இந்த ஜனவரி மாதம் வெளியான எந்த படமும் ஓடவில்லை, பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆகும் படங்களாவது வெற்றிபெறும் என்று நம்பிக்கை கொள்வோம்” என்று ட்வீட் செய்திருந்தார். இதனை கண்டு ஆத்திரம் அடைந்த ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன், இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், இந்த மாதிரி ஆட்கள் தமிழ் சினிமாவுக்கு ஒரு சாபக்கேடு, நாங்கள் கஷ்டப்பட்டு உழைக்கிறோம், வெறும் ஒரு ட்வீட் மூலம் எங்களை உதாசீனம் படுத்துகின்றனர். “எங்களிடமே பணத்துக்காக வரவேண்டியது, அதன் பின் எங்களை குறைசொல்ல வேண்டியது. இவனை மாதிரி ஆட்களை விரட்டி அடிக்கணும்” என்று ஆவேசமாக தனது கருத்தினை பதிவு செய்துள்ளார்.

 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment