“காதல் செய்”என்று மிரட்டி +2 மாணவியை கத்தியால் குத்திய இளைஞர்..!!

திருவண்ணாமலை ,

திருவண்ணாமலை  மாவட்டம் ஆரணி அடுத்த படவேடு பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி, ரேணுகொண்டாபுரம் அரசு பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார். இவரை, படவேடு மங்களாபுரத்தை சேர்ந்த பசுபதி ஒருதலையாக காதலித்துள்ளார்.

தினமும் பள்ளிக்கு செல்லும் போதும், மாலை வகுப்பு முடிந்து வீடு திரும்பும்போதும் மாணவியை வழிமறித்து அந்த இளைஞர் காதலிக்கச் சொல்லி  தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த மாணவியோ எரிச்சலடைந்து அவரை எச்சரித்துள்ளார். திருந்தாத மனம் கொண்ட பசுபதி, பள்ளிக்கு சைக்கிளில் சென்ற மாணவியை தடுத்து தகராறு செய்து கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் மாணவி சரிந்து விழுந்தார்.

Image result for தர்மஅடி

இதைக்கண்ட பொதுமக்கள் ஆத்திரமடைந்து பசுபதியை சுற்றி வளைத்து பிடித்து தர்மஅடி கொடுத்தனர். வேலூர் அரசு மருத்துவமனையில் மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

DINASUVADU 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment