“சொந்தத்தில் திருமணம் வேண்டாம்” தமிழக அமைச்சரின் பேச்சு..!!

சொந்த உறவுமுறையில் திருமணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியுள்ளார்.

நாகையில், மத்திய அரசின் ராஷ்டிரிய  யோஜனா திட்டத்தின்கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி உரையாற்றிய ஓ.எஸ்.மணியன், குழந்தைகள் ஊனமாக பிறப்பதற்கு முக்கிய காரணம் சொந்த உறவு முறையில் திருமணம் செய்து கொள்வதுதான் என்றும், இது  அறிவியல் ரீதியாக நிரூபணம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Image result for ஊனமாக பிறப்பதற்கு

இதனால், சொந்தத்தில் திருமணம் செய்வதை அனைவரும் தவிர்க்க வேண்டும் எனவும், ஒருமுறை செய்யும் தவறு வாழ்நாள் முழுவதும் நமது குழந்தைகளை பாதிக்கும் என்று கூறியுள்ள இவரின் பேச்சை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

DINASUVADU 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment