காதலித்த பெண்ணை திருமணம் செய்வதாக கூறிய இளைஞரின் கண்களை தோண்டி எடுத்த கொடூரம்..!

 

பாகிஸ்தானில் காதலித்த பெண்ணை திருமணம் செய்வதாக கூறிய இளைஞரின் கண்களை அவரது தந்தை மற்றும் சகோதரர்களே தோண்டி எடுத்த கொடூர சம்பவம் அரங்கேறி உள்ளது. பலூசிஸ்தான் மாகாணத்தில் நஸிராபாத் என்ற இடத்தைச் சேர்ந்தவர் அப்துல் பாகி. இவர் தான் காதலிக்கும் பெண்ணை திருமணம் செய்து கொள்ளப் போவதாக தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.Image result for இளைஞரின் கண் தோண்டி

அதற்கு அவர்கள் மறுப்புத் தெரிவித்ததால், பாகிக்கும் அவரது தந்தை மற்றும் சகோதரர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இறுதியில் பாகியை சரமாரியாகத் தாக்கிய அவர்கள் ஸ்பூன் மூலம் அவரது இரு கண்களையும் தோண்டி எடுத்தனர். இதில் படுகாயம் அடைந்த அவர் கராச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக பாகியின் தந்தையும், சகோதரர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்

author avatar
Dinasuvadu desk

Leave a Comment