நடந்து முடிந்த கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்குப்பிறகு , கர்நாடகாவில் காங்கிரஸ்-மஜத கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது.அந்த மாநிலத்தில் இரு கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைத்து, முதலமைச்சராக குமாரசாமி கடந்த மாதம் 23-ஆம் தேதி பதவி ஏற்றார்.
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்குப்பிறகு, முதல்முறையாக கடந்த ஜூலை 5 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்தார் கர்நாடக முதல்வர் குமாரசாமி .இந்த பட்ஜெட்டில் முதல்கட்டமாக 2 லட்சம் வரை பயிர்க்கடன் தள்ளுபடி செய்வதாகவும் அறிவித்தார்.
இதன் பின்னர் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி தலைமை அலுவலகமான பெங்களூருவில் கட்சியின் செயல்வீரர்கள் சார்பில் முதலமைச்சர் ,எம்எல் எக்கள்,அமைச்சர்களுக்கு பாராட்டு விழா கூட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கர்நாடக முதல்வர் குமாரசாமி பங்கேற்று பேசினார்.அப்போது பேசிய அவர்,நான் முதல்வராகி விட்டேன் உங்களில் ஒரு சகோதரன் எண்டு நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தீர்கள்,ஆனால் என்னால் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை.
முதல்வராக கூட்டணி ஆட்சியில் இருப்பது எவ்வளவு மனவேதனை என்று எனக்குமட்டும்தான் தெரியும்.இனியும் நான் பதவியில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.கூட்டணி ஆட்சியில் இருந்து வரும் வலியை விஷம் போல உட்கொண்டுள்ளதாக கூறினார்.இதை கூறியதும் அவர் அழ ஆரம்பித்துவிட்டார். இதனால் என் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும் தெரிவித்தார்.மேலும் ஆண்டவன் அனுமதிக்கும் வரை பதவியில் இருப்பேன்.மக்களுக்கு நல்லது செய்வேன் என்று கண்கலங்கி கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…
முருங்கைக்காய் கிரேவி- முருங்கைக்காய் கிரேவி செய்வது எப்படி என்று பதிவில் காண்போம். தேவையான பொருட்கள் : முருங்கைக்காய் =3 வெங்காயம்=2 தக்காளி =2 சீரகம்=1 ஸ்பூன் எண்ணெய்…