சென்னை ஐ.ஐ.டி. மாணவ – மாணவிகள் கட்டிப்பிடிக்கும் போராட்டம் நடத்தினர். கடந்த 17-ஆம் தேதி மாணவி ஒருவர் தனது ஆண் நண்பரை தோழமையாகக் கட்டிப் பிடித்ததாகவும், இதனை உதயகுமார் என்ற ஐ.ஐ.டி ஊழியர் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து நிர்வாகத்திடம் தெரிவித்த நிலையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததையடுத்து கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் போலீசாரும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கலாச்சாரக் காவலர்கள் என்ற பெயரில் மாணவிகளை புகைப்படும் எடுக்கும் ஊழியர்களால் ஏற்கனவே பல மாணவ – மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறியும், உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மாணவ – மாணவிகள் ‘ஹக் டே’ எனப்படும் கட்டிப்பிடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.