என்னை கொலை செய்ய சதித்திட்டம்…!ஆனால் பிரதமர் நரேந்திர மோடிக்கு தெரியாது …!இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா பரபரப்பு தகவல்

இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா, தன்னைக் கொல்ல இந்தியாவின் உளவு அமைப்பு (RAW) சதிசெய்ததாக குற்றம்சாட்டி உள்ளார்.
Image result for raw india logo
அடுத்த வாரம் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இந்தியா வர இருக்கிறார். இந்நிலையில் கொழும்புவில் நேற்று அந்நாட்டு அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அந்நாட்டு  அதிபர் மைத்ரிபால சிறிசேனா, தன்னைக் கொல்ல இந்தியாவின் உளவு அமைப்பு (RAW) சதிசெய்ததாக குற்றம்சாட்டி உள்ளார்.ஆனால் இதுகுறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தெரியாது என்றும் இலங்கை  அதிபர் சிறிசேனா கூறினார்.
Related image
இந்தியாவை இலங்கை தலைவர்கள் குற்றம் சாட்டுவது இது முதல் முறை அல்ல. 2015ல் நடந்த இலங்கை அதிபர் தேர்தலில், ராஜபக்சே  தோல்வியை சந்தித்த போது,இந்தியாவின் உளவு அமைப்பு (RAW) மீது குற்றம் சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment