ஊழலை ஒழிக்கும் கசப்பு மருந்து தான் பண மதிப்பிழப்பு…பிரதமர் மோடி..!!

ஊழல் எனும் நோயை ஒழிக்கும் கசப்பு மருந்து தான் பண மதிப்பிழப்பு நடவடிக்கை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம் ஜபுவாவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி, சிலர் பணக்கட்டுகளை தங்களது, படுக்கைக்கு கீழும், தொழிற்சாலைகளிலும், அலுவலகங்களிலும் பதுக்கி வைத்திருந்ததாக குறிப்பிட்டார். அவற்றை வெளிக்கொண்டு வந்து, அவர்களையும் வரி செலுத்த வைத்து, அந்த வரிப்பணத்தை மக்கள் நலத்திட்டங்களுக்கு பயன்படுத்தி வருவதாக குறிப்பிட்டார்.கரையானை ஒழிக்கும் விச மருந்தாகவும், ஊழல் எனும் கொடிய நோய்க்கு தீர்வான கசப்பு மருந்தாகவும், பண மதிப்பிழப்பு இருந்தததாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

dinasuvadu.com

author avatar
Dinasuvadu desk

Leave a Comment