இஸ்ரேலில் மத குருக்கள் போராட்டம்; இயேசு அடக்கம் செய்யப்பட்ட சர்ச் உட்பட அனைத்தும் மூடல்…!!

‘தி சர்ச் ஆஃப் ஸ்பல்ச்சர்’ என்பது இஸ்ரேலில் உள்ள ஒரு புனித தளமாகும். இங்கு தான் கிறிஸ்துவ மதத்தினை தோற்றுவித்த புனித இயேசு அடக்கம்செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது. ஆனால் இந்த தளம் தற்போது திடீர் என்று மூடப்பட்டு இருக்கிறது.

இஸ்ரேலில் இருக்கும் அனைத்து சர்ச்சுகளுக்கு சொந்தமாக அதிக அளவிலான நிலம் இருக்கிறது. இந்த நிலங்கள் அனைத்தும் குத்தகைக்கு விடப்பட்டு, அதன்முலம் கிடைக்கும் வருவாயில் இருந்தே அந்த சர்ச்சுகள் எல்லாம் பராமரிக்கப்படுகிறது. இதற்கு எதிராக அங்கு உள்ள அரசானது நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை கொண்டு வர உள்ளது.

சர்ச்சுகளுக்கு சொந்தமாக இருக்கும் நிலங்களில் உள்ள கடைகளுக்கு இதுவரை வரி ஏதும் விதிக்கப்படவில்லை. ஆனால் இனிமேல் வரிவிதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

அரசின் இந்த சட்டத்திற்கு எதிராக கிறிஸ்துவ மத குருமார்கள் போராட்டம் அறிவித்து இருக்கிறார்கள்.இதனைத் தொடர்ந்து நேற்று காலையிலேயே இந்த சர்ச் மூடப்பட்டு, மொத்தமாக அங்குள்ள அதிகாரிகள் அனைவரும் வெளியேறி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment