இன்று இந்தியா Vs தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் டி20 போட்டி ..!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றிய நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது.

தென்னாப்பிரிக்காவில் இன்று முதல் நடைபெறவுள்ள டி20 தொடருக்கான இந்திய அணிக்கு கேப்டனாக சூர்யகுமார் யாதவ் தொடரும் நிலையில் துணை கேப்டனாக ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் டி20 போட்டி இன்று டர்பனில் உள்ள கிங்ஸ்மீட் மைதானத்தில்  இன்று இரவு 7:30 மணிக்கு நடைபெறுகிறது.

இந்த தொடரிலும் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி சாதிக்குமா என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்திய அணி டர்பனில் விளையாடிய 4 டி20 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்த டி20 தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற மூத்த வீரர்கள் இடம்பெறவில்லை.

author avatar
murugan