அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை! கனிஷ்க் நிறுவனத்தின் 48 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்!

அமலாக்கத்துறை,வங்கிகளிடம் 824 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்த கனிஷ்க் தங்க நகை தயாரிப்பு நிறுவனத்தின் 48 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை  முடக்கியிருக்கிறது.

தங்க நகை உற்பத்தியில் ஈடுபட்டு வந்த கனிஷ்க் நிறுவனம், எஸ்பிஐ உள்பட 14 வங்கிகளிடம் 2009ல் இருந்து 2017 ஆம் ஆண்டு வரை 824 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இருப்பில் இருந்ததை காட்டிலும், சுமார் 3000 கிலோ தங்கம் அதிகமாக இருப்பதாக போலியான நிதி அறிக்கை தயார் செய்து வங்கிகளில் கடன் பெற்றிருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.

அந்த பணத்தில் கிருஷ் ஜுவல்லரி தொடங்கியதுடன், காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே புக்கத்துறை கிராமத்தில் நகை தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்து மற்ற நிறுவனங்களும் நகைகளை விற்பனை செய்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பான புகாரில் கடந்த மார்ச் 21ஆம் தேதி அதன் நிறுவனர் பூபேஷ்குமார், இயக்குனர்கள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. மேலும் பூபேஷ்குமார் வீடு, அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. சட்ட விரோத பண பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தது. இந்த நிலையில் புக்கத்துறையில் உள்ள கனிஷ்க் நிறுவனத்திற்கு சொந்தமான நகை தயாரிக்கும் நிறுவனத்தின் நிலம், கட்டிடம், எந்திரங்கள் உள்பட 48 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி இருக்கிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

‘இதுதான் டைம் .. கரெக்ட்டா செஞ்சா உலகமே உன்ன மறக்காது’ !! சேட்டனுக்கு அட்வைஸ் கொடுத்த கம்பிர் !

சென்னை : ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சனுக்கு கொல்கத்தா அணியின் ஆலோசகரான கவுதம் கம்பிர் சில அட்வைஸ் கொடுத்துள்ளார். நடைபெற்று வரும்…

5 mins ago

முழுக்க முழுக்க சிரிப்பு தான்! ‘இங்க நான்தான் கிங்கு’ படத்தின் டிவிட்டர் விமர்சனம்!

சென்னை : இங்க நான்தான் கிங்கு படத்தை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் பாசிட்டிவான விமர்சனங்களை கூறி வருகிறார்கள். காமெடியான கதைகளை தேர்வு செய்து நடித்து மக்களை…

21 mins ago

நாய்களிடம் இருந்து தப்பிப்பது எப்படி.? ‘மரம் ஐடியா’வை பகிர்ந்த மத்திய அரசு.!

சென்னை: நாய்களிடம் இருந்து தப்பிப்பது தொடர்பான சில பாதுகாப்பு வழிமுறைகளை மத்திய கால்நடைத்துறை தெரிவித்துள்ளது. சமீப காலமாகவே தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுக்க பல்வேறு மாநிலங்களில் தெருநாய்கடி…

32 mins ago

நாளை பலப்பரீட்சை.. ஆர்சிபி டிரஸ்ஸிங் ரூமுக்கு திடீர் விசிட் அடித்த தோனி.!

சென்னை: வாழ்வா சாவா என்ற தருணத்தில் இருக்கும் சிஎஸ்கே - ஆர்சிபி இடையேயான ஐபிஎல் போட்டிக்கு முன் தோனி ஆர்சிபி டிரஸ்ஸிங் ரூமுக்கு திடீர் விசிட் செய்தார்.…

35 mins ago

எந்த பந்துவீச்சாளர் வந்தாலும் விராட் கோலியை தடுக்க முடியாது! புகழ்ந்து தள்ளிய முன்னாள் வீரர்!

சென்னை : விராட் கோலி பார்மை எந்த பந்துவீச்சாளர் வந்தாலும் தடுக்க முடியாது என முகமது கைஃப் தெரிவித்துள்ளார். மே 18-ஆம் தேதி பெங்களூர் சின்ன சாமி…

1 hour ago

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலுக்குள் புல்டோசர் செல்லும்.. பிரதமர் மோடி பரபரப்பு.!

சென்னை: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலுக்குள் புல்டோசர் செல்லும் என பிரதமர் மோடி உ.பியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசியுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கியில் நடைபெற்ற…

1 hour ago