அது என்னோட வாய்ஸ் அல்ல… ஸ்டாலின் பெயரையும் போடலாம்…TTV தினகரன் ஒரு கிரிமினல்..அமைச்சர் கண்டனம்..!!

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் குறித்து வெளியான ஆடியோ குறித்து அமைச்சர் ஜெயக்குமார் முற்றிலும் மறுத்துள்ளார்.இதை வெளியீட்ட்து TTV தினகரன் தான் என்றும் குற்றம் சாட்டினார்.அதிமுக_வின் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா அவர்களின் புத்தக வெளியீட்டு விழாவில் செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது.., ஆடியோ_வை  மார்பிங் செய்து இணையத்தில் பதிவிட்டு பரப்பியது  ஏற்றுக் கொள்ள முடியாதது.இதை இப்படி செய்தது அந்த TTV தினகரன் கும்பல் தான் .அந்த கூட்டம் தான் கடந்த 1 மதத்திற்கு முன்பே ஆடியோ இருப்பதாக சொன்னார்கள்.அவர்கள் இப்படி நான் பேசியதாக போலியாக தயாரித்து வெளியீட்டுள்ளனர்.TTV தினகரனுக்கு போலி தனம் செய்வது கைவந்த கலை.இந்த சிறிய  நரிகளுக்கு அஞ்சுவது நாங்கள் அல்ல.நாங்கள் சிங்கங்கள் சட்டத்தின் மூலம் இதை எதிர் கொள்வோம் .கண்டிப்பாக வழக்கு தொடர்வேன்.இந்த போலியான ஆடியோ வெளியீட்டுக்கு TTV தினகரன் , சசிகலா குடும்பம் தான் காரணம் என்றார் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்.
தொடர்ந்து பெய்ய அவர் ,இந்த ஆடியோ பேச்சு என்னுடையது கிடையாது.அந்த குழந்தையின்  சான்றிதழில் யாருடைய பெயரை வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம்.D.ஜெயக்குமார் என்று 1000 பேர் இருப்பார்கள் ,முக.ஸ்டாலின் பெயரை கூட போட்டுக்கொள்ளலாம் எனவே இது திட்டமிட்ட சதி.என் மீது களங்கம் விளைவிக்க வேண்டும் என்று அந்த ஆடியோ_வை வெளிட்டுள்ளனர்.கிரிமினல் வேலையை செய்ய வேண்டுமென்றால் தினகரனுக்கு நிகர் தினகரன் தான் 18 MLA_க்களை எங்கே ஒழித்து வைத்தாலும் சரி 18 MLA_க்களும் எங்களிடம் மீண்டும் திரும்புவார்கள் என்று தெரிவித்தார் அமைசர் ஜெயக்குமார்…
DINASUVADU 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment