அசுர வசூல் வேட்டையில் சர்கார்…….சூப்பர் ஸ்டாரை மிஞ்சிய வசூல் வேட்டை…..கொண்டாடி மகிழும் ரசிகர்கள்..!!!

நடிகர் விஜயின் சர்கார் படம் முதல் நாள் வசூலில் புதிய சாதனையை படைத்துள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் – விஜய் கூட்டணியில் கத்தி, துப்பாக்கி படங்கள் வரிசையில் இது 3 வது படமாக உருவானது சர்கார்.  இந்த கூட்டணி ஏற்கெனவே  2 படங்களில் மிகப்பெரிய வசூல் வேட்டையை  அடித்தது.அந்த வரிசையில் இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு அதிகரித்தது. அதுமட்டுமல்லாமல் சர்கார் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய்யின் அரசியல் பேச்சு, ரசிகர்களை எதிர்பார்ப்பின் உச்சத்திற்கு கொண்டு சென்றது.

இந்த மகிழ்ச்சியை விஜய் ரசிகர்கள் நேற்று கொண்டாட்டங்களாக வெளிப்படுத்தி அசத்தினர்.படத்திற்கான முன்பதிவு மட்டுமல்லாமல் முதல் நாள் சோக்கான டிக்கெட்டுகள் அனைத்து திரையரங்குகளிலும்விறுவிறு வென வேகமாக விற்றுத் தீர்ந்தது. இது மட்டுமல்லாமல் ஒரு சில இடங்களில் படத்திற்கு டிக்கெட் வாங்க ரசிகர்கள் அதிகமாக ஒரே நேரத்தில் குவிந்ததால் போலீசார் தடியடி நடத்தி அவர்களை கலைக்கும் சூழ்நிலையும் நடந்தது.இந்நிலையில் தன்னுடைய தீபாவளி முதல் நாளை வெற்றிகரமாக கடந்திருக்கும் சர்கார் படத்தின் வசூல் வேட்டை எவ்வளவு என்று பார்த்தாக் ரூ.30 கோடியை கடந்து. பிற படங்களை எல்லாம் அடித்து பின்னுக்கு தள்ளியுள்ளது.தமிழ் சினிமாவில் இதுவரை எந்தவொரு தமிழ்படமும் இவ்வளவு வசூல்  அதுவும் ஒரே நாளில் அசுர வேட்டையை செய்ததில்லை என்றும் கூறப்படுகிறது.

Image result for rajini kalaகுறிப்பாக சொல்லவேண்டுமென்றால் சென்னையில் மட்டும் முதல் நாள் வசூல் ரூ.2 கோடியை கடந்து சர்கார் சாதனை படைத்திருக்கிறது.இது சூப்பர் ஸ்டார் ரஜினியின் காலா படம் ரூ.1.76 கோடி வசூலித்திருந்தே சாதனையாக கருதப்பட்டநிலையில் அந்த சாதனையை சர்கார் அதிரடியாக முறியடித்திருக்கிறது.மேலும் நடிகர் விஜயின் சர்கார் மும்பையில் பல திரையரங்குகளில் கிட்டத்தட்ட 12 காட்சிகள் வரை திரையிடப்பட்டது என்று அதன் வர்த்தக நிபுணர் தரண் ஆதர்ஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருக்கிறார்.

மேலும் வெளிநாடான அமெரிக்காவில் படம் சுமார் 152 இடங்களில் திரையிடப்பட்டு ஒரே நாளில் ரூ.2.31 கோடி வசூல் செய்திருக்கிறது.சர்கார் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து தனது வசூல் வேட்டையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது மேலும் பாகுபலி 2 வின் வசூல் வேட்டையையும் உடைத்துள்ளது.

 

DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment