சர்கார் மீதும் நடிகர் விஜய் மீதும் சட்டப்படி நடவடிக்கை…! சட்டத்துறை அமைச்சர் காட்டம்……சர்கார் சட்டத்துறையை என்ன செய்தது..???

ஏ.ஆர்.முருகதாஸ் – விஜய் கூட்டணியில் கத்தி, துப்பாக்கி படங்கள் வரிசையில் இது 3 வது படமாக உருவானது சர்கார்.நடிகை கீர்த்தி சுரேஷ் ,இசை புயல் AR ரகுமான் இடையில் சன்பீக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்ட கூட்டணியில் உருவானது சர்கார்.

மேலும் விஜய் முருகதாஸ் கூட்டணி ஏற்கெனவே  2 படங்களில் மிகப்பெரிய வசூல் வேட்டையை  அடித்தது.அந்த வரிசையில் இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு அதிகரித்தது. அதுமட்டுமல்லாமல் சர்கார் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய்யின் அரசியல் பேச்சு, ரசிகர்களை எதிர்பார்ப்பின் உச்சத்திற்கு கொண்டு சென்றது.

Image result for cv shanmugam SARKAR

இந்த நிலையில் சட்டத்துறை அமைச்சர் சர்கார் படத்தின் மீது தனது காட்டமான பார்வையை பதித்துள்ளார்.இந்த காட்டத்திற்கு காரணம் சர்கார் படம் முழுக்க முழுக்க அரசியல் படம் என்பது அன்று  படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேச்சு மூலமே அனைவரும் அறிந்தனர்.அனைவரும் மத்தியிலும் படத்தின் எதிர்ப்பார்ப்பு எகிரியது.தற்போது  படம் வெளிவந்து ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்று தனது சர்காரை அனைத்து திரையரங்குகளிலும் அமைத்து வருகிறது.

இந்நிலையில் படத்தில் அரசின் விலையில்லா பொருட்களை எரிப்பது போன்ற காட்சி அமைக்கப்பட்டிருப்பது  அரசை அவமதிக்கும் செயல்  அந்த காட்சியை உடனே நீக்க வேண்டும் இல்லை என்றால் நடிகர் விஜய், பட தயாரிப்பாளர் மற்றும் படத்தை திரையிட்ட திரை அரங்குகள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் காட்டமாக தெரிவித்துள்ளார் . சட்டத்துறையையே சர்கார் குடைந்து எடுத்துள்ளது என்று ரசிகர்களும்,மக்களும் முனுமுனுக்கின்றனர்.

DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment