நாளை எனது புதிய அணியின் பெயரை அறிவிப்பேன். இதற்காக ஏற்கனவே தேர்தல் ஆணையத்தை அணுகி மனு அளிக்கப்பட்டது.
நாளை நடைபெறும் அணி அறிவிப்பில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எனக்கு ஆதரவு தெரிவித்த 2 எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்வார்கள் என ஆர்கே நகர் எம்.எல்.ஏ டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அதேபோல் தமிழகத்தில் ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் அரசியல் வருகை வரவேற்கத்தக்கது எனவும் அவர் கூறினார்.