ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு : சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது நாளை விசாரணை

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது.
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் அமலாக்கத்துறை சிதம்பரத்தை கைது செய்தது.தற்போது சிதம்பம் திகார் சிறையில் உள்ளார்.இந்த நிலையில் அமலாக்கத்துறை கைதுக்கு எதிராக  ஜாமீன் கோரி, ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுவில் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்துவிட்டது டெல்லி உயர்நீதிமன்றம்.
பின்னர் ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரத்தில் அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் ப. சிதம்பரம் மேல்முறையீடு செய்தார்.தற்போது சிதம்பரத்தின் ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிபிஐ வழக்கில் சிதம்பரம் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது .