தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நாளை 144 தடை உத்தரவு

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நாளை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று அம்மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறுகையில், தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நாளை மாலை 6 மணி முதல் 12ம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .மேலும் பாஞ்சாலங்குறிச்சியில் மே 10 மற்றும் 11ம் தேதிகளில் நடைபெறவுள்ள வீரசக்கதேவி ஆலய திருவிழாவில் அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment