21 கட்சிகள் தொடர்ந்த மனு!தள்ளுபடி செய்வதாக உச்சநீதிமன்றம் அறிவிப்பு

ஒப்புகைச்சீட்டு இயந்திரங்களின் எண்ணிக்கையை மேலும் உயர்த்தக் கோரி 21 கட்சிகள் தொடர்ந்த மனுவை  தள்ளுபடி செய்தது  உச்சநீதிமன்றம்.

வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவாகும் 50 சதவீத வாக்குகளை ஒப்புகைச்சீட்டு இயந்திரங்களுடன் சரிபார்க்க கோரி திமுக, தெலுங்கு தேசம் உள்ளிட்ட 21 எதிர்க்கட்சிகள் சார்பில் மறுஆய்வு மனு ஓன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு விசாரணை செய்தது.பின் மறுஆய்வு மனுவை தள்ளுபடி செய்வதாக அறிவித்தது உச்சநீதிமன்றம்.

Leave a Comment