மாநிலங்களவை தேர்தல் : 6-ஆம் தேதி திமுக வேட்பாளர்கள் மற்றும் வைகோ வேட்பு மனுத்தாக்கல்

ஜூலை 18-ஆம் தேதி தமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு மாநிலங்களவை தேர்தல் நடைபெறுகிறது.இதனால் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும்  திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வழக்கறிஞர் வில்சன் ,தொ.மு.ச சண்முகம் போட்டியிடுகிறார்.திமுக போட்டியிடும் மூன்று தொகுதிகளில் ஒரு தொகுதி மதிமுகவிற்கு ஒதுக்கப்பட்டது.மதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ போட்டியிடுகிறார்.

இந்த நிலையில்  மாநிலங்களவை தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் சண்முகம், வில்சன் வருகின்ற  6-ஆம் தேதி வேட்பு மனுத்தாக்கல் செய்ய உள்ளனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது .அன்றைய தினமே மதிமுகவில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள வைகோவும் வேட்பு மனுத்தாக்கல் செய்ய உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.