பொண்டாட்டியை தவிக்க விட்டு 3 வருடமாக திருநங்கையுடன் வாழ்ந்து வந்த கணவன்!

பொண்டாட்டியை தவிக்க விட்டு 3 வருடமாக திருநங்கையுடன் வாழ்ந்து வந்த கணவன்!

விழுப்புரம் அருகே உள்ள வழுரெட்டி பகுதியை சார்ந்த ஜெயப்பிரதா இவர் கடந்த 2013-ம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி கிராமத்தை சார்ந்த சுரேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு வீட்டை விட்டு சென்ற சுரேஷ் வீடு திரும்பததால் ஜெயப்பிரதா மற்றும் அவரது உறவினர்கள் சேர்ந்து பல இடத்தில் தேடியும் சுரேஷ் கிடைக்கவில்லை.இதனால் விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

மூன்று ஆண்டுகளாக போலீசார் தேடியும் சுரேஷ் கிடைக்கவில்லை.இந்நிலையில் சமீபத்தில் டிக் டாக் வீடியோவில் காணாமல் போன சுரேஷ் போல ஒரு நபர் திருநங்கை உடன் வீடியோவில் இருப்பதை பார்த்த ஜெயப்பிரதா உறவினர்கள் அந்த விடியோவை ஜெயப்பிரதாவிடம் காண்பித்தனர்.

இதில் இருப்பது எனது கணவன் தான் என ஜெயப்பிரதா கூற இதனை தொடர்ந்து விழுப்புரம் திருநங்கை அமைப்பு சார்ந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அந்த திருநங்கை ஓசூரில் இருப்பதாக கூறினார்.

இந்நிலையில் ஓசூரில் சென்று விசாரணை செய்த போலீசார் அந்த திருநங்கையுடன்  சுரேஷ் திருமணம் செய்து வாழ்ந்து வந்தாக தெரியவந்தது.பின்னர் சுரேஷை மீட்டு ஜெயப் பிரதாவிடம் ஒப்படைத்தனர். ஓசூரில் சுரேஷ் தனியார் டிராக்டர் கம்பெனியில் வேலை செய்து வந்த போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

author avatar
murugan
Join our channel google news Youtube