மக்களவைத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் 5 மணி நேரம் தாமதமாகும் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

இந்தியாவில் மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெற்று முடிந்துள்ளது.நாளை வாக்கு எண்ணிக்கை நாடு முழுவதும் நடைபெற உள்ளது.

தற்போது தேர்தல் ஆணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில்,   மக்களவைத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் ஐந்து மணி நேரம் தாமதம் ஏற்படும். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளிலும் 5 வி.வி.பேட் இயந்திரங்களில் உள்ள பதிவு சீட்டுகளை, மின்னனு வாக்கு பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள எண்ணிக்கையுடன் சரிபார்ப்பதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது என்று தெரிவித்துள்ளது.

Leave a Comment