வாக்கு எண்ணுபவர் இவற்றை மட்டும் எடுத்து செல்ல தேர்தல் ஆணையம் அனுமதி

மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கவுள்ளது .நாடு முழுவதும் மொத்தம் உள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளில் வேலூர் தொகுதி தவிர உள்ள மீதம் உள்ள 542 நாடாளுமன்ற தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது .

மேலும் தமிழகத்தில் 38 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு  காலியாக  இருக்கும் 22 சட்ட சபை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

இந்நிலையில் இன்று வாக்குகளை எண்ணும் பணி நடைபெற உள்ளதால் வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குகளை எண்ணுவோர் பேனா, பென்சில், பேப்பர், நோட்பேட் போன்றவற்றை எடுத்துச்செல்ல தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

author avatar
murugan

Leave a Comment