தூத்துக்குடியில் தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது…!

இந்தியாவில் 7 -கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்றுள்ளது.கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்தியா முழுவதும்  542 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது .இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.இதற்காக நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் 45 வாக்கு எண்ணும் மையங்களுக்கு தபால் வாக்குகள் எல்லாம் கொண்டுவரப்பட்ட  நிலையில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கான தபால் வாக்குகள் எண்ணும் பணி தற்போது தொடங்கி உள்ளது.

author avatar
kavitha

Leave a Comment