கீழடி தொடர்பாக மதுரையில் கண்காட்சி அமைக்கும் தேதி விரைவில் அறிவிக்கப்படும்- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

கீழடி தொடர்பாக மதுரையில் கண்காட்சி அமைக்கும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில், கீழடி அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை மதுரையில் கண்காட்சியாக அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும்.
கீழடி அகழாய்வினை காணவரும் பார்வையாளர்கள் வரும் 13ம் தேதி வரை அனுமதிக்கப்படுவார்கள் என்று  அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.