சிதம்பரத்தால் பெருமைப்பெற்ற தமிழகம் தற்போது சிறை சென்றதால் அதனை இழந்துவிட்டது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில், எதிர்க்கட்சி தலைவர் கடைசி வரையில் பொறுத்து கொண்டே இருக்க வேண்டியதுதான்.ஒரு நிமிடம் கூட வீணாக்காமல் வெளிநாட்டு முதலீட்டை கொண்டு வருவதில் கவனமாக உள்ளார்.
முதல்வர் முதலீட்டை கொண்டு வருவதில் முதல்வர் கவனமுடன் இருப்பதால் அவரை ஸ்டாலின் பாராட்டியே தீர வேண்டும்.நிதியமைச்சராக இருந்தபோது ப.சிதம்பரத்தால் பெருமைப்பெற்ற தமிழகம் தற்போது சிறை சென்றதால் அதனை இழந்துவிட்டது என்று தெரிவித்தார்.