உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்: இந்தியாவின் சரத் வெள்ளியும்,வருண் சிங் வெண்கலமும் வென்றனர்.
லண்டன்: உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் உயரம் தாண்டுதல் பிரிவில் இந்தியாவின் சரத் (வெள்ளி), வருண் சிங் (வெண்கலம் ) பதக்கம் வென்றுள்ளனர். உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் லண்டனில் நடக்கிறது. இதன் உயரம் தாண்டுதல் (எப்-42) போட்டியில் இந்தியா சார்பில் சரத் குமார், வருண் சிங் பங்கேற்றனர். இதில் 1.84 மீ., துாரம் தாண்டிய சரத் வெள்ளி வென்றார். மற்றொரு இந்திய வீரரான வருண் சிங் 1.77 மீ., துாரம் தாண்டி வெண்கலம் கைப்பற்றினார். அமெரிக்காவின் … Read more