பிரதமர் நரேந்திர மோடியுடன் திடீர் சந்திப்பு ? காரணத்தை விளக்கிய ஜி.கே.வாசன்

கூட்டணி கட்சி தலைவர் என்ற முறையில் பிரதமர் மோடியை சந்தித்து 20 நிமிடம் பேசினேன் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.அவருடன் பேசிய பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் ஜி.கே.வாசன்.அப்பொழுது அவர் கூறுகையில்,கூட்டணி கட்சி தலைவர் என்ற முறையில் பிரதமர் மோடியை சந்தித்து 20 நிமிடம் பேசினேன். தமிழகத்தின் வளர்ச்சிக்கான பிரச்சனைகள் குறித்து பிரதமர் மோடியிடம் பேசினேன்.
கல்வி, விவசாயம், தொழில், வேலைவாய்ப்பு, தமிழுக்கான முக்கியத்துவம் குறித்து பிரதமரிடம் எடுத்துக் கூறினேன் .மத்திய, மாநில அரசுகள் மீதும் அதனை சார்ந்த கூட்டணி கட்சிகள் மீதும் மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது, அதனாலேயே இடைத்தேர்தலில் வெற்றி பெற்றோம்.இடைத்தேர்தல் வெற்றி மக்களின் மனநிலை மாற்றத்தை காட்டுகிறது என்று தெரிவித்தார்.