ஸ்டெலைட் ஆலை உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவை எதிர்த்து ..!உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு..!!

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில்  உயர்நீதிமன்ற மதுரைகிளை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது.
ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் அந்த ஆலையை திறக்க பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தூத்துக்குடியைச் சேர்ந்த பேராசிரியை பாத்திமா பாபு என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அவர் தொடர்ந்த அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைகிளை நீதிபதிகள் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் விவகாரத்தில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும்  என்று கடுமையான ஒரு உத்தரவை பிறப்பித்து உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவை எதிர்த்து  ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. மேல்முறையீய்டு செய்த அந்த மனுவில் தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மட்டுமே மேல்முறையீடு செய்ய முடியும் என்று கூறிய அந்த மனுவில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த உத்தரவை ரத்துசெய்ய வேண்டும் என்று ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் மேல்முறையீடு செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
kavitha

Leave a Comment