சென்னையில் கோஷ்டி மோதலில் இருவருக்கு அரிவாள் வெட்டு!

சென்னை ஐஸ் ஹவுஸ் வெங்கட்ரங்கம் தெருவை சேர்ந்தவர் அருண். அருண் மற்றும் அவரது நபரான விக்கி இருவர் மீதும், நேற்று நள்ளிரவு 15 பேர் கொண்ட கும்பல் கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனையடுத்து, அருண் மற்றும் விக்கி மீது அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. இருவரையும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் இது தொடர்பாக ஐஸ் ஹவுஸ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த தாக்குதல், முன் விரோதம் காரணமாகவும், தங்களது பலத்தை நிரூபிக்கவும் நடத்தப்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.